சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு (census ) தேவையா ? இல்லையா ? என்று விவாதம் நடந்து கொண்டிருக்கிறது . இப்படி செய்தால் மொத்தம் உள்ள 250 சாதிகளும் கட்சி தான் துவங்குவார்கள் . எந்த விதமான முன்னேற்றத்துக்கும் இது வழி வகுக்காது . சாதியை அழிக்க போகிறேன் என்று சொல்லி சாதி கட்சியோடு கூட்டணி வைக்கிறார்கள் . நரி ஆட்டை பத்திரமாக பார்த்து கொள்கிறேன் என்று சொல்வது போல் உள்ளது . பெருகுகின்ற மக்கள் தொகையை சாதி வாரியாக கணக்கு எடுக்க வேண்டுமா என விவாதிப்பதை விட்டு , அழிகின்ற மரங்கள் கணக்கை எடுங்கள் ... மிகவும் அவசியமான ஒன்று .
தங்கம் விலை ஏரிடுச்சுன்னு
வையகமே வருந்துது
ஆனால்
இந்த வறட்சியை பார்த்தால்
தண்ணீர் விலை தங்கத்துக்கு மேலே
தாவிடும் போலவே !
பங்குச்சந்தையில்
தண்ணீரையும் மரங்களையும்
வரிசைப்படுத்தும் காலம்
வரும் போலவே தோழா
இந்த கொடுமை தொடர்ந்தால் ?
நிலம் விலை ஏறுதுன்னு
மரத்தை
இலங்கை தமிழர் போல் சாய்த்து
ரியல் எஸ்டேட் என்று
பூதாகர விலை வைத்து
பித்தலாட்டம் ஆடிநீரே
என்ன ஆச்சு ரியலா ?
பூமித்தாய் தவிக்கிறாள்
தன் மகனை இழந்து !
சூரியன் தன் படைகளோடு
முன்னேறி அருகில் வந்து
போர்தொடுக்கிறான் !
அக்கினி சுடர்களை
ஏவுகனைகளாய் வீசி !
TV கொடுக்கும் அரசாங்கம்
ஓட்டுக்கு பணம் கொடுக்கும்
அரசியல் கட்சிகள்
இம்முறை மரக்கன்றையும்
சேர்த்து வழங்குங்கள் !
சென்சசில் இனிமேலும்
பெருகும் மக்கள்
கணக்கு வேண்டாம் !
அழியும் மரங்கள்
கணக்கு எடுங்கள் !
சாதி வாரியாக கூட எடுங்கள்
award கொடுப்போம்
அதிகம் வளர்க்கும் சாதிக்கு !!!
Subscribe to:
Post Comments (Atom)
Sema machi.. Anda last line punch was too gud..
ReplyDeletetop gear la pora.. ada mutti modhi nikkaradhuku maram kooda illayae.. ellathayum dhaan ivanunga vetti puttanuvalae..
ReplyDelete