On my maiden blog , I touched Srilankan issue . Though many of them felt difficult to comment on the sensational topic , its a hard truth . Last month , it rained in chennai , though the rainy season had passed much before . Also there is no clue of when it will rain , as the prettty clear , whity sky will start crying suddenly . Though the meterological department in India is very poor in forecasting weather , our Chennai Deputy Director General of Meteorology S.R.Ramanan is like a Rishi . His forecast will be perfect . When he says , cyclones are moved away we can expect a rain and its in the other way round as well .
சிங்கார சென்னை , மழை நேரங்களில் சீரழிந்த சென்னை ஆகி விடும் . தெரு முழுதும் தண்ணீர் வெள்ளமாய் நிற்கும் . அதிலும் ஆட்டோகாரன் race போவான் . D70 உம், M 70 உம் அப்போதும் நிரம்பி வழியும் . Drainage என்ற ஒன்று இந்த ஊரில் இருக்கிறதா என்ற கேள்வி எழும் ? ஏன் என்றால் சாக்கடை மேலே குமறிக்கொண்டு வரும் , மண்டை உடையும் போது இரத்தம் வெளியே வருவது போன்று . சில வீடுகளில் temporary swimming pool உருவாகும் . அங்கும் சிறுவர்கள் கப்பல் விட்டு விளையாடுவர் . Life is beautiful படம் மாதிரி இருக்கும் .
கண்ணீர் கலந்த தண்ணீரில் விளையாடுகிறோம் என்று தெரியாது இளசுகள் titanic கப்பல் விட்டு விளையாடும் . பின்னால் இருக்கும் பெரியவர்கள் அப்போதும் என் தலைவன் போல் வருமா என்று அவரவர் கட்சியை பற்றி பெருமை பேசுவர் , கொஞ்சம் தண்ணிரில் மூழ்கியுள்ள டீக்கடையில் நின்று கொண்டு , அப்படியே மனைவியின் வசை வாங்கி கொண்டு ....
இதற்காக ஏன் மழை பொழிகிறது என்று மடத்தனமாக கேட்க மாட்டேன் இயற்கையை பார்த்து ? ஏன் என்றால் , நீரின்றி அமையாது உலகு என்று எல்லோரும் உணருவர் ... அதும் சென்னை வாசிகளுக்கு மழை தீர்த்தம் போன்று , ஆத்திகன் கண்ணில் தெரியும் கடவுள் போன்று , எனக்கு ஒரு அழகான பெண் போன்று .... இதெல்லாம் எப்போதாவது நிகழ்வது தானே !!! ஆனால் எதுவும் அதிகமானால் அவஸ்தை தான் ... மிஞ்சினால் நஞ்சு தானே ?
மழையே விடாது பெய்யும் போது , தூறல்கள் ஓய்வு எடுக்காமல் தூவானம் எடுக்கும் போது , அடை மழை ஆர்ற்பரிக்கும் போது , வெள்ள பேருக்கு வீதியிலே வரும் போது , காற்று என்னும் கள்வனும் சேரும் போது ... என் காதலி தான் ஞாபகம் வருகிறாள் . அவளும் அப்புடி தான் ... அவளை பார்க்காவிட்டால் சிறை அடைந்த பறவை போல துடிப்பேன் .
எப்போதாவது பார்த்தால் ஆனந்தத்தில் தூங்க மாட்டேன் , விண்ணிலே விளையாட நினைப்பேன் ... அவளே அன்பை அதிகம் காட்டி தொந்தரவு செய்யும் போது , ஏன் வருகிறாள் என்று நினைப்பேன் ....
மழையும் காதலியும் ஒன்று
வந்தாலும் பிரச்சனை ;
வராவிட்டாலும் பிரச்சனை !
உங்களை பார்க்காமலே இருந்தால்
வருகிறது தவிப்பு ;
எப்போதாவது பார்த்தால்
வருகிறது களிப்பு ;
நீங்களே அன்பை கொஞ்சம்
அதிகம் காட்டி அனுப்பொழுதும்
தொந்தரவு செய்யும்போது
வருகிறது சலிப்பு !!!
சென்னை மழை இதை தான் , எனக்கு ஞாபகம் ஊட்டியது ... எங்கிருந்தோ , எங்கோ வந்துவிட்டோம் அல்ல ... காதலுக்கும் , கார்மேகதுக்கும் முடிச்சு போட்டுவிட்டேன் அல்லவா ? அது போகட்டும் ...
இனியாவது இந்த சென்னையில் , மழை ஒரு வரமாகட்டும் . மழை காலம் குதூகளம் கொண்டு வரட்டும் . எப்படி ?
Please allocate the government fund to necessary and worth spending things like good drainage system , providing clean water for the people , creating employment oppurtunities for the educated and uneducated people , for people in the panchayats and corporation , men and the women , youth and the old , partymen or an outsider , irrespective of caste , creed and religion . I think spending people's money on free telivision sets , samathuvapurams and cleaning koovam is a havoc thing and can never satisify aam aadmi's problems .