Monday, June 14, 2010
சென்னை என் பார்வையில் ...
தேனீக்கள் மொய்த்திடுது எங்கு பார்த்தாலும்
ஆனால் வண்ண மலர்கள் இல்லை சுற்றிலும்
கோமானும் சீமானும் , கூலியும் பணக்காரனும்
சாப்பாட்டை சைக்கிள் carrier -ல் வைத்திருப்பவனும்
சான்ட்ரோவில் போகும் சாப்ட்வேர் வர்க்கமும் !
கொசுக்கூட்டத்தோடு குடிசையில் வாழ்பவனும்
கோடி சம்பாரிக்கும் வியாபார காந்தமும் !
கருப்பு பணம் கத்தை கத்தையாய் வைத்து
வாழ்க்கையில் நடிக்கும் அரசியல் வாதியும்
வண்ணத்திரையில் நடிக்கும் கலைஞனும் !
10 அடிக்கு ஒரு bridge , சந்துக்கு சந்து
சாப்ட்வேர் கம்பெனி , சாலை ஓரமெல்லாம்
குஷ்பூ இட்லியும் , கூவத்து
சந்தனமும் மணக்குது ...
ஆட்குக்கால் சூப்பும் , ஐயிர மீன் வருவலும்
ஆளையே தூக்குது …
அதெல்லாம் விட தமிழ் நட்டு GDP கே
காரணமா இருக்க நம்ம TASMAC
பள்ளிகூடத்த விட அதிகமாகும்
கோவிலை விட கூட்டமாவும் இருக்குது …
இங்க ரோடுல படுத்து , 'பன்' கும் 'டீ' கும்
அளஞ்சவங்கள பங்களாவும் BMW காரும்
வாங்க வெச்சது இந்த சிங்கரா சென்னை !
சேட்டு நகை கடை , செட்டியார் மளிகை கடை
கவுண்டர் அரிசி மில் என்று யார் வந்து
எத வெச்சாலும் வாழ வெக்குது
இந்த சென்னை பட்டணம் !
கலாம் , காமராஜ் , கலைஞர் ,
ரெஹ்மான் , ராஜா , ரஜினி , கமல் ,
மணி ரத்னம் , இஸ்ரோ மயில் சாமி என
பெரிய மனிதர்களை
உருவாக்கி விட்டது இந்த சென்னை !
இது இருப்பது தான் இந்தியாவுக்கு கீழ
ஆனா இந்தியா மேல வருவதே
இந்த சிங்கார சென்னையால ….
Subscribe to:
Post Comments (Atom)
dei super ah ezhudhi irukka da.. but kavidhai maadhiri ezhudha try panniya ?? korvaiya varala.. i think u shd have made it like a paragraph instead of stanzas..
ReplyDelete@ Sandy
ReplyDeleteThanks a lot da San ... inda itha kavithai maathiri thaan da podalaam nu paathaen .. but first two para's mattumae 30 to 35 lines vanduduchu .. romba perusa poidumonu ippudi pottutaen . But change panniduraen da . enakkae anda feel therinjudu , kavithai nadai illa nu .