ஏ தண்ணிரே !
நீ !
மலையில் இருந்து
விழுந்தால் அருவி !
விண்ணில் இருந்து
விழுந்தால் மழை !
ஓட முடியாது
நொண்டி ஆகி விட்டால் குளம் !
கண்ணில் இருந்து
விழுந்தால் கண்ணீர் !
நாங்கள் குணமாக
நீ கோபமானால் வெந்நீர் !
வாயுக்குள் போகும் போது
குடிநீர் !
சிறிது வய்ற்றுக்குக் கீழ் வந்தால்
சிறுநீர் !
கோவிலுக்குள் கொஞ்சம்
துளசியோடு சேர்ந்தால் தீர்த்தம் !
எல்லோரையும் குளிப்பாட்டும் நீ
அசுத்தமானால் சாக்கடை !
வாழ்ந்தது போதும்
என கல்லறை போனால் கடல் !
இப்படி
என்ன பெயரில் இருந்தாலும்
பிறப்பது முதல்
இறப்பது வரை
நீ இன்றி நான் இல்லை !!!
Subscribe to:
Post Comments (Atom)
Such a simple and nice poem !!!I enjoyed reading it..
ReplyDelete@ Banupriya
ReplyDeleteThanks a lot !