Wednesday, July 21, 2010

நீ இன்றி நான் இல்லை

ஏ தண்ணிரே !

நீ !
 
மலையில் இருந்து  
விழுந்தால் அருவி !
 
விண்ணில் இருந்து
விழுந்தால் மழை !

ஓட முடியாது
நொண்டி ஆகி விட்டால் குளம்  !
  
கண்ணில் இருந்து  
விழுந்தால் கண்ணீர் !

நாங்கள் குணமாக
நீ கோபமானால் வெந்நீர்  !

வாயுக்குள் போகும் போது
குடிநீர் !
 
சிறிது வய்ற்றுக்குக் கீழ் வந்தால்
சிறுநீர் !

கோவிலுக்குள் கொஞ்சம்
துளசியோடு சேர்ந்தால் தீர்த்தம் !

எல்லோரையும் குளிப்பாட்டும் நீ
அசுத்தமானால் சாக்கடை  !

வாழ்ந்தது போதும்
என கல்லறை போனால் கடல்  !

இப்படி
என்ன பெயரில் இருந்தாலும்
பிறப்பது முதல்
இறப்பது வரை  

நீ இன்றி நான் இல்லை   !!!

2 comments: