Wednesday, July 7, 2010

பொருந்தா காமம்

காதல் , காமம் இது இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்றாலும் , காதலோ  காமமோ  வயதை பார்த்து வருவதல்ல . 40 வயது angelina jolie ஐ 18 வயது பயனுக்கு பிடிக்காதா ? 55 வயது அப்பாவுக்குப் பிடிக்காதா ? 55 வயது அப்பா , 18 வயது பயன் இருவருமே ரசிப்பதில்லையா ? அது ஹாலிவுட் angelina மீது மட்டும்  அல்ல  , திருச்சி பீமா நகரில் இருக்கும் வெண்ணிலாவுக்கும் அது பொருந்தும் . ஆனால் சமுதாயம் , சம்பரதாயம் என்னும் வெளி உலகத்தின் பார்வைக்காக நம் ஆசைகளை , உணர்வுகளை பூட்டி  வைத்துக்கொள்கிறோம்  . இன்னும் உண்மையிலே நெஞ்சில் இருந்து சொல்ல வேண்டுமானால் , ஆண்கள் ஒரு பெண்ணை பார்க்கும்போது வயதை பார்ப்பதில்லை , வனப்பைத்தான் பார்ப்போம் . பெண்களுக்கும் இது பொருந்தும் . Converse is also true in this case .

பல பேர் முதலில் சைட் அடித்தது  , அவன் school டீச்சர் , அல்லது தன அக்காவின் தோழியை ஆக இருக்கும்  . ஆனால்  இதனை  வெளியில் சொல்லி இருக்க மாட்டார்கள் . அடுத்தவர்கள் தம்மை தவறாக எண்ணுவார்கள் என்று . தவறு , சரி என்பதெல்லாம் நமக்கு நாமே பிரித்துக் கொண்டவை , பெயரிட்டுக்கொண்டவை என பலருக்குத் தெரியாது . சிலருக்கு தெரிந்தாலும் மீற முடியாது , தம்மை சுற்றிய மூட உலகத்துக்காக ! இதனை தமிழில் அழகாக பொருந்தா காமம் என்று கூறுகிறார்கள் .

பொருந்தா என்பது என்னைப் பொறுத்தவரை சமுதாயத்துக்கு தான் . மனதுக்கோ , உடலுக்கோ அல்ல , ஊருக்குதான் . நடைமுறையில் இந்த சமுதாயத்தில் அவர்களை திருமணம் செய்து கொண்டு வாழ்வது  சாத்தியமா என்று தெரியவில்லை . அதற்கு கூட சில அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவார்கள் , கலாசார சீர்கேடு என்று . ஆனால் 22 வயது பயன் 36 வயது பெண்ணின் மேலோ , 36 வயது  பெண்  22 வயது  பயன்  மீது  காதலோ  , காமமோ  கொள்வதை  , அந்த  உணர்வுகளை 25 வரிகளில் சொல்லி இருக்கேன்  . 


அடையார் அழகி நீ தான் !
அய்யனாவரம் அழகன் நான் தான் !
பஞ்சு உடம்பு நெஞ்சழுதக்காரி நீ !
கட்டு உடம்பு கள்ளன் நான்

காதல் பன்னா தப்பு இல்ல ..
அப்ப அன்பு கொண்டா குத்தம் இல்ல ..
இதில வெக்க பட ஏதும் இல்ல ..
வயது ஒன்னும் தடை இல்ல ..
பொருந்தா காமம் புதுசு இல்ல ..

சுற்றத்தை எண்ணி
நம் அன்பின்
அர்த்தத்தை வீணாக்கீடாத !
வலிமை இருந்தா
வயச ஏன் பார்க்கணும் ?
மனதில் துணிவு இருந்தா
இந்த உலகை ஏன் நாம்
கண் நோக்கனும் ?

காலையில் பிறந்து
மாலையில் சாகும் பூவுக்கும்
பல நாள் வாழும்
வண்ணத்து பூச்சிக்கும்
காதல் வருவதில்லையா ?

ஊரை பார்க்காதடி நீ
அது வாழ்ந்தா வருத்தப்படும் !
செத்து போனா சிரிக்கும் !
தப்பும் நியாமும்
இங்க ஊருக்கு ஊரு மாறும் !
நீதி வசதிக்கேற்ப மாறும் !
மனதுக்கு பிடிச்சிருந்தா போதும்
திருமணமோ மறுமணமோ
செய்து கொள்ளலாம்
மறுபிறவியா எடுக்க போறோம் ?

பூலோகம் பிடிக்கலைன்னா சொல்லு
என் பொன் நிலவே
வெள்ளியிலே நாம்
வீடு கட்டி வாழலாம் !!!

2 comments:

  1. Beautiful, and the best of all your posts.
    //தவறு , சரி என்பதெல்லாம் நமக்கு நாமே பிரித்துக் கொண்டவை , பெயரிட்டுக்கொண்டவை என பலருக்குத் தெரியாது// very true.

    kavithai romba alaga iruku. kudos!

    ReplyDelete
  2. @ Deekshanya

    Thank you very much ! Even I think this is my best as I expressed openly and boldly . We are also iconoclasts like KB , Jeyakanthan and Kamal :-)

    ReplyDelete