Thursday, August 5, 2010

கொடியது மதுவா ? மாதுவா ?

மதுவின் ருசி கண்டவன்
100 கணக்கில் நோட்டுக்களை விட்டு
போதை ஏற்றினாலும்
அரையோ புல்லோ அடித்து
பித்தம் ஏறி சத்தம் இல்லாமல்
அடங்கி விடுவான் !

மாதுவின் ருசி கண்டவன்
அந்த மல்லிகையின் மயக்கத்தில்
கள்ளி அவள் மடியில்
கோடி இருந்தாலும் கொட்டி விட்டு
கோமணத்துணி எஞ்சி இருக்கையில்
இன்னும் போதை ஏற வில்லையே !
ஆசை தீர வில்லையே !
என்று அரும் பைத்தியம்
கொண்டு அலைவான் !!!

இரண்டு ருசிக்கும்
அடிமை ஆனால்
என்ன ஆகும் ?
அம்பானி சொத்து இருந்தாலும்
சப்பாணி ஆக வேண்டிய தான் !!!

1 comment: