Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts

Monday, July 19, 2010

ஆண்களிடம் கேட்காதீர்கள்/ சொல்லாதீர்கள் :

பெண்கள் என்பவர்கள் இல்லாது வாழ்வு இல்லை ... காற்று , நீர் , உணவு போன்று இன்றி அமையாதா ஒன்று .. இரண்டறக் கலந்தது . ஆனால் , சில நேரம் உறவுகளில் அவர்கள் உச்சத்துக்கும் வெறுப்பேற்றுவார்கள் .

தினம் 10 நிமிட இன்பத்துக்காக , அவர்களின் 10 மணி நேர புராணத்தை கேக்க வேண்டி இருக்குதே ! என்று கல்யாணம் , காதல் என்ற தெரிந்தே விழும் பள்ளத்தில் விழுந்து விசும்பிக்கொண்டே , ஹ்ம்ம் ,,, என்ன செய்ய ? அப்புடியே ஓட்ட வேண்டிய தான் ... இது என்ன அமெரிக்க வா ... சட்டுன்னு இன்னொருத்தியோட போகன்னு வாழும் ஆண்களை , அம்புகள் எய்து தினமும் கொள்ளும் பெண்களுக்கு ....

ஆண்களிடம் கேட்காதீர்கள்/ சொல்லாதீர்கள் :

காதலி காதலனிடம் ...

'propose ' பண்ணும் போது

ச .. எப்புடி இப்புடி எல்லாம் தோணுது உனக்கு ?

நான் உன்கிட்ட அந்த மாறி பழகி இருந்தேன்னா 'ஐ அம் வெரி சாரி '

'நம்ம ஏன் 'friends' ஆவே இருந்துட கூடாது ?'

நாங்கலாம் orthodox family .. 'தே வில் நெவெர் எவர் அச்செப்ட் திஸ் '

கமிட் ஆகி விட்டால் ..

7 வருடமாக காதலிக்கும் பெண் கம்பெனியில் ஒரு முக்கியமான வேலை செய்து கொண்டு இருக்கும் காதலனிடம் போன் செய்து 'என்ன கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இருக்கா இல்லையா ?'

'இப்பலாம் புளிச்சு போச்சுல ... எல்லாத்தையும் கேட்டாச்சு , பாத்தாச்சுன்னு .. போன் கூட எடுக்க முடியாத அளவுக்கு வேலை ?' பேசிகிற்றுக்கப்பவே 'குடகு' மலையில தண்ணி வர மாறி , கண்ணுலே இருந்து ஊத்து
வேற எடுத்துடும் .

நான் தானே ப்ரொபோஸ் பண்ணினேன் .. அதான் கழுட்டி விட பாக்கற ..

மனைவி கணவனிடம் :


அலுவலகத்துக்கும் பள்ளிக்கும் பறந்து கொண்டிருக்கும் கணவனிடம் , 'இன்னைக்கும் லேட்டா தான் வருவீங்களா ' ?

இந்த மாதமாவது அந்த 'ரெட்டை கோத்து' சங்கிலியை பேங்க் லேருந்து மூட்கலாமா ?

அந்த பயலுக்கு ஏதோ 'கம்ப்யூட்டர்' வேணுமாம் ... கையில காசு இருக்குமா ?

கல்யாணம் ஆனப்ப ரெண்டு படத்துக்கு போனது .. பால போன உன்னை கட்டிகிட்டு , இந்த குடும்பத்துக்கு ஆக்கி போட்டே , என் வாழ்க்கை ஓடிடுச்சு ...

எங்கப்பா சொல்ற மாறி 'டாக்டர்' மாப்புலயே கல்யணம் பண்ணிக்கிட்டு போயிருக்கலாம் ...

உங்க அண்ணனுக்கு குடுத்த காச கேக்க மாட்டியா ? உன்னைய நல்ல இழிச்ச வாயன்னு அரப்பு வெச்சு தேக்குறான் . நான் மட்டும் இல்லன்னா உன் புலப்பா ஏலம் போட்டுருப்பான் உன் அண்ணன் தம்பி எல்லாம் ...

உங்கப்பாவுக்கு விகித சோறு இனிமே நான் போடா முடியாது .. அதும் உங்கப்பா ஏதோ கலெக்டர் வேல வாங்கி வெச்ச மாறி ... எங்கப்பா தான் படிக்க வெச்சாரு , வேல வாங்கி வெச்சார் நு மூச்சுக்கு முன்னூறு தரவ முனுகிரியே . கொண்டு வர்ற 5000 காசையும் 4000 ஆக்கிடு வேணும்னா .. அந்த சரசு கடியில account வெச்சுக்குட்டு வாங்கி திங்க சொல்லு ...

60 ஆயுட்டாலும் ...

31 ஆம் தேதி வரும் 3000 ரூபாய் பென்சன் பணத்துலயும் 'அந்த பென்ஷன் பணத்துல பெரிய பய பேரனுக்கு ஒரு கா பவுன்ல மோதிரம் எடுத்து போடா கூடாது ?'

டிவி இல் நியூஸ் கேட்கும் பொது ...'நீ என்ன நியூஸ் கேட்டு கலெக்டர் ஆவோ , கலைஞர் ஆவோ வா ஆவ போற ? அத நிறுத்திட்டு அந்த தட்டுல ரெண்டு தோசையும் , கொஞ்சம் பழசும் இருக்கு ,,, திண்ணுட்டு மீதம் இருந்தா தண்ணி ஊத்தி வை .. நான் தூங்க போறேன் .'

ஏய்யா இந்த வயசுல உனக்கு என்ன ஏழு , எட்டு பொண்டாட்டி கேக்குதா ? ஊட்டுல டீ போடுறப்ப அந்த 'வேசி' மால்வாயா கடையிலதான் போயி டீ குடிக்கனுமா ? அவ கிட்ட என்ன சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டுருக்க தினம் ..

இந்த நாசமா போனவன் கிட்ட 'உப் உப் உப் ' நு .. ஊதாத ஊதாத நு தலையால அடிசுகிட்டேன் .. குடல் எல்லாம் புன்னா போயி சோறு தண்ணி இல்லாம கிடக்குறான் செத்து தொலையாம ... என் பாவத்த வாங்கி கிட்டு ...செத்து தொலஞ்சா அந்த போஸ்ட் ஆபீஸ் ல இருக்கா பணத்துல எடுத்து போட்டு , கருமாதி பண்ணிட்டு இருக்கறதா பங்கு போட்டு குடுத்து நானும் போயி சேர்ந்துடுவேன் ...