Wednesday, March 24, 2010

இதயத்தில் இடமில்லை

சில நேரம் நாம் , சில விசயங்களை ... அது சந்தோசமானாலும் சங்கடமானாலும் பூட்டி வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம் ..சிலரால் முடியும் , பலரால் முடியாது . அந்த பலரில் நானும் ஒருவன் .

திணை அளவோ , வான் அளவோ ? எழுச்சியோ , வீழ்ச்சியோ ? சந்தோசமோ , சங்கடமோ ? இதயம் எனும் cloak room il அறைகள் இல்லாமல் , banking locker il இடம் இல்லாமல் , நினைவுகளை சுமைதாங்க முடியாமல் இறக்கி வைக்கிறோம் . பின் ஏனடா இறக்கி வைத்தோம் என்று வருத்தப்படுகிறோம்.

ஒருமுறையோ , பலமுறையோ , சிலரோ பலரோ இது போன்று உணர்ந்து இருப்பார்கள் ...

அந்த உணர்வுகளை பேனா மூலம் painting அடித்துள்ளேன் இந்த blog எனும் சுவரில் .

அலை அலையாய் சில
நினைவுகள் என் நெஞ்சின்
கரைகளை வந்து
தட்டும் போது ...
பெரிய மதில்களை எழுப்பி
பூட்டி வைக்க நினைக்கிறேன் !
ஆனால்
கொந்தளிப்புகள் பார்த்து
பின் நானே திறந்து
விட்டு தடுமாறுகிறேன் !

சுகமாய் இருக்கும் போது
சந்தோஷ அலைகள்
பீறிக்கொண்டு வருகிறது ..
சுமைகளால் தடுமாறும் போது
சஞ்சல alaigal
பீறிக்கொண்டு வருகிறது ..

தடுக்கும் போது
திறந்து விட்டு விடலாமே
என்று நினைக்கிறேன் !
திறந்து விட்டபின்
தடுத்து இருக்கலாமே
என்று நினைக்கிறேன் !

மூளையை பெரியதாய்
கொடுத்த இறைவன்
இதயத்தை சிறியதாய்
கொடுத்து விட்டானே என்று
விசனப்பட்டுருக்கிரேன் !

அவ்வளவு பெரிய கடலே
சில நேரம்
சுனாமியாய் உணர்வுகளை
கொந்தளிக்கும் போது
tumbler size மனம்
செய்தால் என்ன ?
என்று தேற்றிக்கொண்டு
அழுத்தம் இல்லாத மனது
endra நெகிழ்ச்சியோடும்
ஆழம் இல்லாத மனது
என்ற வருத்தத்தோடும்

இறைவனோ ...
இயற்கையோ காரணம்
என்று பலியை
அவன் மேலோ ,
அது மேலோ போட்டு
என் உணர்வுகளை
பூட்டி வைக்க முடியாமல்
பேனா மூலம்
காட்டி கொண்டிருக்கிறேன் ..
சுனாமியாய் எழுத்துக்கள் !!!

4 comments: